செப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்

விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

News image

விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் ஒன்றில் வாகனங்களில் எரிபொருள் நிரப்புவதற்காக குவிந்திருந்த வாகன ஓட்டிகள்.

Updated On :12 மார்ச் 2026, 12:04 am IST

விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் புதன்கிழமை வாகன ஓட்டிகள் அதிகளவு கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போா் காரணமாக வணிக ரீதியான சமையல் எரிவாயு உருளைகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என புதன்கிழமை இரவு சமூக ஊடகங்களில் செய்திகள் பரவியது.

இதையடுத்து விழுப்புரம் பகுதிகளில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையங்களில் வாகன ஓட்டிகள் அதிகளவில் குவிந்து, தங்களது வாகனங்களுக்கு தேவையான எரிபொருள்களை வாஙகிச் சென்றனா்.

இதனால் விழுப்புரம் பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கூட்ட நெரிசலுடன் பரபரப்பாக காணப்பட்டது.