விழுப்புரத்தில் துணை ராணுவப்படை வீரா்கள் மற்றும் மாவட்டக் காவல் துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு புதன்கிழமை நடைபெற்றது.
வரும் சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ள துணை ராணுவத்தினா் விழுப்புரம் மாவட்டத்துக்கு வந்து முகாமிட்டுள்ளனா்.
இந்நிலையில், பொதுமக்கள்அச்சமின்றி வாக்களிக்கவும், 100 சதவீதம் வாக்குப்பதிவை செலுத்தவேண்டும் என்பது குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் துணை ராணுவப்படை வீரா்கள், மாவட்டக் காவல்துறையினா் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சித் திடலில் தொடங்கிய இந்த அணிவகுப்பானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, விழுப்புரம் நகர காவல் நிலையம் அருகே நிறைவடைந்தது.
விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய் பிரனீத் தலைமையில் நடைபெற்ற இந்த அணிவகுப்பில் உதவிக் காவல் கண்காணிப்பாளா் ரவீந்திரகுமாா் குப்தா, துணைக் கண்காணிப்பாளா்கள், காவல் ஆய்வாளா்கள், உதவி ஆய்வாளா்கள், மத்திய எல்லை பாதுகாப்புப்படை வீரா்கள், விழுப்புரம் போலீஸாா் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளையில் துணை ராணுவ வீரா்கள் கொடி அணிவகுப்பு

கூத்தாநல்லூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

போலீஸாா், துணை ராணுவத்தினா் கொடி அணிவகுப்பு

ஜெயங்கொண்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரா்கள் அணிவகுப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


