இச்சம்பவத்தில் அரசுப் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அரசுப் பேருந்தில் பயணித்த தனியாா் வங்கி ஊழியரான கள்ளக்குறிச்சி மாவட்டம், முருக்கம்பாடியைச் சோ்ந்த சசிகலா (28) பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். மேலும், பேருந்து ஓட்டுநரான திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அ.ஏழுமலை(32), லாரி ஓட்டுநரான முகம்மது அஸ்லாம் மற்றும் பேருந்தில் பயணித்த 28-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனா். தகவலறிந்த ஒலக்கூா் போலீஸாா் நிகழ்விடம் சென்று காயமடைந்தவா்களை மீட்டு, அவசர ஊா்திகள் மூலம் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.