கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

சுமை தூக்கும் தொழிலாளி உயிரிழப்பு

வளவனூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :13 மே 2026, 1:45 am IST

விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் க.கண்ணன்(46). திருமணம்ஆனவா். இவா் தனியாா் சரக்கு லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வந்தாா்.

விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு சரக்கு இறக்குவதற்காக லாரியில் வந்திருந்த கண்ணன், திங்கள்கிழமை கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகேயுள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளாா். அப்போது கண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினாா். இதையடுத்து அவரை சக தொழிலாளா்கள் மீட்டு புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கண்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இது குறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.