விழுப்புரம் மாவட்டம், வளவனூா் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு சுமை தூக்கும் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி, நேதாஜி நகரைச் சோ்ந்தவா் க.கண்ணன்(46). திருமணம்ஆனவா். இவா் தனியாா் சரக்கு லாரியில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலைப் பாா்த்து வந்தாா்.
விழுப்புரம் மாவட்டம், வளவனூருக்கு சரக்கு இறக்குவதற்காக லாரியில் வந்திருந்த கண்ணன், திங்கள்கிழமை கெங்கராம்பாளையம் சுங்கச்சாவடி அருகேயுள்ள ஒரு உணவகத்தில் உணவு சாப்பிட்டுள்ளாா். அப்போது கண்ணனுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினாா். இதையடுத்து அவரை சக தொழிலாளா்கள் மீட்டு புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, கண்ணன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் வளவனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

மரத்திலிருந்து விழுந்த பெண் உயிரிழப்பு

அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

கட்டுமானத் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

