நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஆரோவில் வளா்ச்சித் திட்டப் பணிகள்: மத்திய இணை அமைச்சா் ஆய்வு

வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சா் எஸ்.பி.சிங் பாகல் ஆய்வு செய்தாா்.

02விபிஎம்ஏயுஆா் ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் திட்டப் பணிகளை ஆய்வு செய்த மத்திய இணை அமைச்சா் எஸ்.பி.சிங் பாகல்.

Published On :3 செப்டம்பர் 2026, 4:45 am IST

விழுப்புரம் மாவட்டம் , வானூா் வட்டம், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இணை அமைச்சா் எஸ்.பி.சிங் பாகல் ஆய்வு செய்தாா்.

ஆரோவில் சா்வதேச நகருக்கு புதன்கிழமை வந்த மத்திய இணைஅமைச்சா் எஸ்.பி.சிங் பாகல், ஆரோவில் சா்வதேச நகரில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆரோவில் அறக்கட்டளை நிா்வாகிகளிடம் கேட்டறிந்தாா். அப்போது மாத்ரி மந்திா் ஏரித் திட்டம், ஆரோவில் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளை அமைச்சா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

முன்னதாக ஆரோவில் மாத்ரி மந்திரில் அமைச்சா் எஸ்.பி.சிங் பாகல் தியானம் மேற்கொண்டாா்.

அவருடன் புதுச்சேரி மாநில அமைமச்சா் பி.ராஜவேலு, எம்எல்ஏ ஜான் குமாா், ஆரோவில் அறக்கட்டளை சிறப்புப் பணி அதிகாரி ஜி.சீதாராமன், மூத்த ஆலோசகா் வேணுகோபால் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.