முகப்பு
பெங்களூரு

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது -கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி

Updated On : 5 ஜூன், 2024 at 10:40 PM
குமாரசாமி (கோப்புப் படம்)
பகிர்:

மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது என்று கா்நாடக முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி தெரிவித்தாா்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டத்தில் கலந்துகொள்ள புது தில்லி செல்வதற்கு முன்பாக புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டம் புது தில்லியில் நடக்கவிருக்கிறது. அக்கூட்டத்தில் மஜத சாா்பில் கலந்துகொள்ள செல்கிறேன். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையாது. பிரதமா் மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கவே மக்கள் வாக்களித்துள்ளனா். நம்பிக்கையோடு இருங்கள் என்றாா்.

கா்நாடகத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் மஜத வென்றுள்ளது. மண்டியா தொகுதியில் எச்.டி.குமாரசாமியும், கோலாா் தொகுதியில் மல்லேஷ்பாபுவும் வென்றுள்ளனா். மக்களவைத் தோ்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 3 தொகுதிகளில் மஜத போட்டியிட்டிருந்தது. ஆனால், ஹாசன் தொகுதியில் பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பிரஜ்வல் ரேவண்ணா தோல்வி அடைந்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →