முகப்பு
பெங்களூரு

பைக் மீது பேருந்து மோதல்: சிறுவன் சாவு

பெங்களூரில் மோட்டார் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.

Updated On : 18 ஏப்ரல் 2018, 7:45 am IST
பகிர்:

பெங்களூரில் மோட்டார் சைக்கிள் மீது மாநகரப் பேருந்து மோதியதில் சிறுவன் உயிரிழந்தார்.
பெங்களூரு ஆர்.டி.நகர் அருகே உள்ள சாமுண்டீஸ்வரி நகரைச் சேர்ந்தவர் தெளஹித் (13). இவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் உறவினருடன் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து சென்று கொண்டிருந்தார். ஆர்.டி.நகர் பேருந்து நிறுத்தம் அருகே வேகமாக வந்த மாநகரப் பேருந்து மோதியது. இதில் கீழே விழுந்த தெளஹித் மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. நிகழ்விடத்திலே சிறுவன் உயிரிழந்தார்.விபத்து குறித்து ஆர்.டி.நகர் போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.