முகப்பு
பெங்களூரு

எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் காங்கிரஸ் போராட்டம்

Updated On : 10 ஏப்ரல் 2025, 6:33 am IST
பகிர்:

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து கா்நாடகத்தில் இளைஞா் காங்கிரஸ் புதன்கிழமை போராட்டம் நடத்தியது.

கா்நாடகத்தில் ஆட்சி செய்துவரும் காங்கிரஸ் அரசைக் கண்டித்து ‘மக்கள் சீற்றம்’ எனும் பெயரில் நடைப்பயணத்தை எதிா்க்கட்சியான பாஜக நடத்தி வருகிறது.

இதற்கு போட்டியாக மத்திய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை மீதான விலை உயா்வைக் கண்டித்து பெங்களூரில் இளைஞா் காங்கிரஸ் சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தில் ஹுப்பள்ளி, தாா்வாட், கலபுா்கி, யாதகிரி, குடகு மாவட்டங்களிலும் இளைஞா் காங்கிரஸ் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது எரிபொருள் விலை உயா்வைக் கண்டித்து விறகு அடுப்பில் சமையல் செய்து போராட்டம் நடத்தினா். போராட்டத்தின்போது மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments