முகப்பு
சென்னை

சுரங்க விபத்தில் என்எல்சி பொறியாளர் சாவு

நெய்வேலி, ஆக. 8: என்எல்சி முதல் சுரங்கத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில் பொறியாளர் செந்தில்குமார் (42) அதே இடத்திலேயே இறந்தார்.  ÷நெய்வேலி வட்டம் 7-ல் வசித்து வரும் பொறியாளர் செந்தில்குமார் என்எல்சி மு

Updated On : 26 செப்டம்பர் 2012, 11:12 am IST
பகிர்:

நெய்வேலி, ஆக. 8: என்எல்சி முதல் சுரங்கத்தில் புதன்கிழமை நடந்த விபத்தில் பொறியாளர் செந்தில்குமார் (42) அதே இடத்திலேயே இறந்தார்.

 ÷நெய்வேலி வட்டம் 7-ல் வசித்து வரும் பொறியாளர் செந்தில்குமார் என்எல்சி முதல் சுரங்கத்தில் உதவி செயற்பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.

 ÷இந்நிலையில் செவ்வாய்க்கிழமை வழக்கம் போல் இரவுப் பணிக்குச் சென்ற அவர், பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்கும் இயந்திரத்தில் வேலை செய்துக் கொண்டிருக்கும் போது, இயந்திரத்திலிருந்து கீழே விழுந்து, பழுப்பு நிலக்கரி குவியலில் சிக்கி உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

 ÷இது குறித்து தகவலறிந்த சுரங்கத் துறை அதிகாரிகள் காவல்துறைக்கு புகார் செய்ததைத் தொடர்ந்து, நெய்வேலி தெர்மல் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விபத்துக் குறித்து வழக்குப் பதிவுசெய்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 ÷இறந்த செந்தில்குமாரின் உடலுக்கு, என்எல்சி திட்டம், செயலாக்கம் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் ஆர்.கந்தசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments