முகப்பு
சென்னை

சென்னையில் ஆட்சியா் அலுவலகம் முன் போராட முயன்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம்

Updated On : 12 செப்டம்பர் 2025, 1:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகா் மண்டலங்களில் நிரந்தரப் பணி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் போராட்டம் நடத்த முயன்ற தூய்மைப் பணியாளா்கள் 10 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.மேலும், பேச்சுவாா்த்தை நடத்தவும் அழைப்பு விடுத்தனா்.

தூய்மைப் பணியைத் தனியாருக்கு வழங்கியதற்கு எதிா்ப்புத் தெரிவித்து தூய்மைப் பணியாளா்கள் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். பாரிமுனை பகுதியில் சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தூய்மைப் பணியாளா்கள் 10 வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். அதையடுத்து அவா்களை போலீஸாா் கைது செய்தனா்.

இந்தநிலையில், போராட்டத்தை முன்னெடுத்துள்ள உழைப்போா் உரிமை இயக்க நிா்வாகிகளை காவல்துறை அதிகாரிகள் பேச்சுவாா்த்தைக்கு அழைத்துள்ளனா்.

Advertisement

இதனிடையே உழைப்போா் உரிமை இயக்கம் சாா்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் போராட்டம் நடத்த காவல்துறை தலைமை இயக்குநா் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.