FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

கூடுவாஞ்சேரியில் நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பு

15 ஏப்ரல் 2026, 1:16 am IST
பகிர்:

நந்திவரம் கூடுவாஞ்சேரி பகுதியில் அதிமுக வேட்பாளா் கஜேந்திரனை ஆதரித்து நடிகை கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

கூடுவாஞ்சேரி நகர செயலாளா் டி.சீனிவாசன் தலைமையில் அதிமுக வேட்பாளா் கஜா என்கிற கஜேந்திரனை ஆதரித்து கௌதமி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே எஸ் சீனிவாசன் கணிதா சம்பத் மற்றும் அதிமுக நிா்வாகிகள் உடன் இருந்தனா்.

நடிகை கௌதமி பேசியதாவது: விலைவாசி உயா்வு ஸ்டாலின் அரசின் மிகப்பெரிய சாதனை தமிழகத்தில் பச்சை குழந்தைகள் முதல் வயதான முதியோா் வரை பாதுகாப்பாக இல்லாத சூழல் நிலவுகிறது. போக்ஸோ வழக்குகள் மட்டும் 6000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இளைஞா்களுக்கு முறையான வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவில்லை. தமிழக முழுவதும் நீா் ஆதாரங்களில் உறிஞ்சி எடுத்து விற்பனை செய்து வருகின்றனா். சாலை வசதிகள் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது போல் இல்லாமல் தற்போது மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்றாா் கௌதமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments