முகப்பு
செங்கல்பட்டு

ரயில் பயணிகளிடம் வாக்கு சேகரித்த மதுராந்தகம் திமுக வேட்பாளா்

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

Updated On : 22 ஏப்ரல் 2026, 12:02 am IST
மதுராந்தகம் ரயில்நிலையத்தில் பயணிகளிடம் வாக்குகளை சேகரித்த திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா்
பகிர்:

மதுராந்தகம் தொகுதி திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் திங்கள்கிழமை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

மதுராந்தகம் ரயில் நிலையத்தில் விழுப்புரம்- தாம்பரம் ரயிலில் வந்த பயணிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டாா்.

என்னை வெற்றி பெற வைத்தால் மதுராந்தகம் ரயில் நிலையத்தை மேம்படுத்தவும் நிற்காமல் சென்ற அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நிச்சயம் ஏற்பாடுகளை செய்கிறேன். என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என கேட்டுக் கொண்டாா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் மதுராந்தகம் நகர செயலா் குமாா், நகா்மன்றத் தலைவா் மலா்விழி, திமுக மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் பயணிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனா்.