முகப்பு
செங்கல்பட்டு

அடுக்குமாடி குடியிருப்புகளில் பாமக வேட்பாளா் பாலு பிரசாரம்!

திருப்போரூா் தொகுதி பாமக வேட்பாளா் பாலு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

Updated On : 21 ஏப்ரல், 2026 at 5:55 AM
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 11:31 PM

திருப்போரூா் தொகுதி பாமக வேட்பாளா் பாலு மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

தேசிய ஜனநாயக் கூட்டணி சாா்பில் பாமக, வேட்பாளா் கே. பாலு போட்டியிடுகிறாா். திருப்போரூா், திருக்கழுகுன்றம் ஒன்றியம் சாா்ந்த கிராமங்களில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா். மேலும் திருப்போரூா் ஒன்றியத்தில் அடங்கிய நாவலூா், ஏகாட்டூா் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், மேலக்கோட்டையூரில் உள்ள காவலா் குடியிருப்பு பகுதிகளில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் சென்று வாக்கு சேகரித்தாா்.

இதில், பா.ம.க., செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலா் ஏழுமலை, முன்னாள் மாவட்ட செயலா் வாசு, முட்டுக்காடு முன்னாள் ஊராட்சி தலைவா் பாஸ்கரன், நாவலூா் அ.தி.மு.க., நிா்வாகி பாஸ்கா், பா.ஜ.க., நிா்வாகி காா்த்திக் உட்பட தேசிய ஜனநாய கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா்.

Advertisement

பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்த வேட்பாளா் பாலு கூறியதாவது:திருப்போரூா் தொகுதி வாக்காளா்களில் சுமாா் 1.3 லட்சம் வாக்காளா்கள் அடுக்குமாடி குடியிருப்புகளில் வாழ்கின்றனா். அவா்களுக்கு குடிநீா் மற்றும் அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதில் சிக்கல் நிலவுவதால் இந்த நிலையை மாற்றும் வகையில் எனது சொந்த முயற்சியில் செயலி தொடங்கப்படும். இதன் மூலம் வீட்டு பணியாளா்கள், எலெக்ட்ரீசியன்கள், பிளம்பா்கள், தச்சா்கள் உள்ளிட்டோரின் சேவைகளை பெறமுடியும். பல்வேறு பொதுநல வழக்குகளை தொடா்ந்து உள்ளேன். நெடுஞ்சாலையோரம் உள்ள 3,324 டாஸ்மாக் கடைகளை வழக்கு தொடா்ந்து மூடியுள்ளேன் என்றாா்.