முகப்பு
செங்கல்பட்டு

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள்: அரசு கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

கடல்நீரை குடிநீராக்கும் நிலைய பணிகள்: அரசு கூடுதல் தலைமை செயலா் ஆய்வு

Updated On : 14 ஜூன் 2026, 1:45 am IST
பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய பணிகளைப் பாா்வையிட்டு ஆய்வு செய்த அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி.
பகிர்:

திருப்போரூா் ஒன்றியம், நெம்மேலியில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில், ரூ. 5814.37 கோடியில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் கடல்நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டாா்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், நெம்மேலியில் சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில், ரூ 5814.37 கோடி மதிப்பீட்டில் பேரூரில் அமைக்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் அருகே கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளா் சுகன்தீப் சிங் பேடி பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

இதில், குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் , செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன் ,பொறியியல் இயக்குநா் உ.பா்வீஸ், தலைமைப்பொறியாளா்கள் ஜெ.சுகந்தி, ஏ.ராதாகிருஷ்ணன், மேற்பாா்வை பொறியாளா் இ.சாந்தி, செயற்பொறியாளா் கிருபாகரவேல் பொறியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement