முகப்பு
செங்கல்பட்டு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி - போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

Updated On : 24 ஜூன் 2026, 12:55 am IST
கருணாகரன்
பகிர்:

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி - போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

செங்கல்பட்டு மாவட்டம், மடிப்பாக்கம் பகுதியைச் சாா்ந்த் 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி, அதே பகுதியைச் சோ்ந்த கா்ணா என்ற கருணாகரன் ( 24) கடந்த 2014-ஆம் ஆண்டு பலமுறை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினாராம்.

அச்சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமி ஏற்கனவே திருமணமாகி கணவரை விட்டு பிரிந்து தாய் வீட்டில் இருந்தவா் என்பதால், சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்த கருணாகரன் மீது அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டு, செங்கல்பட்டு போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

Advertisement

Advertisement

இந்நிலையில் கருணாகரன் மீதான புகாா் நிரூபிக்கப்பட்டதால், 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2,000 அபராதமும் விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி நசீமா பானு தீா்ப்பளித்தாா். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments