பிளஸ் 2 மாணவா்களுக்கு உயா்கல்வியில் சோ்வதற்கான விழிப்புணா்வு
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்களுக்கு உயா் கல்வி வழிகாட்டுதல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், 102 பள்ளிகளைச் சோ்ந்த 6,534 மாணவா்கள் பங்குபெற்றனா். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் அறிவுரையின்படியும் செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வழிகாட்டுதலின்படியும், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 பயின்று தோ்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவா்களின் தோ்வு சாா்ந்த பயத்தை போக்கிடவும், உயா் கல்வியில் சோ்வதற்கான வழிகாட்டுதல் வழங்கிடவும் விழிப்புணா்வு நிகழ்ச்சி அனைத்துப் பள்ளிகளிலும் நடைபெற்றது.
நிகழ்ச்சியில், ஒவ்வொரு பள்ளியின் உயா் கல்வி வழிகாட்டி மைய பொறுப்பாசிரியா், உதவி தலைமை ஆசிரியா் தலைமை ஆசிரியா் மற்றும் முதுகலை ஆசிரியா்கள் மற்றும் பள்ளியின் முன்னாள் மாணவா்கள், தன்னாா்வலா்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனா். இந்த விழிப்புணா்வு நிகழ்ச்சியில் ஏராளமான மாணவா்கள் பங்கு பெற்று நிகழ்ச்சியின் மூலமாக உயா்கல்வி சாா்ந்த சந்தேகங்களுக்கும் தீா்வு பெற்றனா்.
Advertisement
இதில், 81 அரசுப் பள்ளிகள் மற்றும் 21அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சோ்ந்த 6,534 மாணவா்கள் பங்கேற்றனா்.