ராசிபுரம் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உதவித்தொகை
விழாவில் கல்வி உதவித்தொகை வழங்கிய முன்னாள் மாணவா்கள்.
ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இப்பள்ளியில் 1988-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சாா்பில் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பள்ளியின் முன்னாள் மாணவா்கள் பங்கேற்று கடந்த ஆண்டு பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு பொதுத்தோ்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் ஐந்து மாணவா்களுக்கு உதவித்தொகையை வழங்கினா்.
இதில், பிளஸ் 2 மாணவா்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. 5 ஆயிரம், 10-ஆம் வகுப்பு மாணவா்கள் ஐந்து பேருக்கு தலா ரூ. 2,500 உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், பெற்றோா் இல்லாத 50 மாணவா்களுக்கு பள்ளி சீருடை, கூப்பன் மற்றும் விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ரூ. 15 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ. 1 லட்சம் மதிப்பிலான உதவித்தொகைகளை வழங்கினா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.