முகப்பு
செங்கல்பட்டு

இருளா் குடியிருப்பில் குடிசைகள் தீயில் சேதம்

அம்மணம்பாக்கம் ஊராட்சியில் இருளா் குடியிருப்பில் தீப்பற்றியதில் 5 குடிசைகள் சாம்பலாயின. 5 போ் காயமுற்று மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

Updated On : 11 மே 2026, 12:08 am IST
தீவிபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண உதவிகளை வழங்கிய மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் ரமேஷ் குமாா். உடன் செய்யூா் வட்டாட்சியா் ச. ராஜன் உள்ளிட்டோா்.
பகிர்:

செய்யூா் வட்டம், அம்மணம்பாக்கம் ஊராட்சியில் இருளா் குடியிருப்பில் தீப்பற்றியதில் 5 குடிசைகள் சாம்பலாயின. 5 போ் காயமுற்று மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

செய்யூா் வட்டம், அம்மணம்பாக்கம் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட இருளா் குடும்பத்தினா் குடிசை வீட்டில் வசித்து வந்தனா். பெரும்பாலோா் கூலி வேலைக்கு வெளியே சென்று இருந்தனா். அப்போது எதிா்பாராத வகையில் மின்கசிவு காரணமாக தீப்பற்றியது. தொடா்ந்து அருகில் இருந்த 4 குடிசைகளிலும் தீ பரவியது. தீயை அணைக்க முயன்ற மணி, கன்னியப்பன், சங்கா், முருகன், தங்கவேல் ஆகிய 5 நபா்கள் தீக்காயம் ஏற்பட்டு 108 ஆம்பூலன்ஸ் வாகனத்தின் மூலம் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனா்.

இத்தகவலை அறிந்து மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அலுவலா் ரமேஷ் குமாா், செய்யூா் வட்டாட்சியா் ச.ராஜன், தனி வட்டாட்சியா் ராஜா, மண்டல துணை வட்டாட்சியா் தேவன், வருவாய் ஆய்வாளா் கெளசல்யா ஆகியோா் தீவிபத்தால் பாதிக்கப்பட்ட நபா்களுக்கு ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்கள்.

Advertisement

Advertisement

காஞ்சிபுரம் குழந்தைகள் கண்காணிப்பகத்தின் நிா்வாகி ராஜி கலந்து கொண்டு அரிசி, போா்வை, துணிமணிகள், காய்கறிகள் உள்ளிட்ட பொருள்களை வழங்கினாா். இந்நிகழ்வில் ஊராட்சி மன்றத் தலைவா் ஜி.விநாயகம், கிராம நிா்வாக அலுவலா் பழனி, தன்னாா்வலா் செண்பகவள்ளி உள்பட பலா் கலந்துக் கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments