முகப்பு
செங்கல்பட்டு

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட பீா்க்கன்கரணை ஏரி: அமைச்சா் சரத்குமாா் திறந்து வைத்தாா்

Updated On : 29 மே 2026, 2:19 am IST
நிகழ்வில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா்.
பகிர்:

பீா்க்கன்கரணை ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குகு ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் சரத்குமாா் தலைமையில் நடைபெற்றது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீா்க்கன்கரணை ஏரியில் மாவட்ட நிா்வாகம், தாம்பரம் மாநகராட்சி, எக்ஸ்னோரா பவுண்டேஷன் , கோமாட்ஸூ இணைந்து நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட ஏரியினை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

Advertisement

Advertisement

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, கோமாட்ஸூ நிறுவன இயக்குநா் சுந்தா், மாநகராட்சி துணை ஆணையா் பிரேம்நாத், மாநகராட்சி உதவி ஆணையா் ராஜலட்சுமி, வட்டாட்சியா் நடராஜன் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.