முகப்பு
சென்னை

காவலர் மீது தாக்குதல்: மூவர் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:18 am IST
பகிர்:

சென்னை வில்லிவாக்கத்தில் காவலர் மீது தாக்குதல் நடத்தியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
வில்லிவாக்கம் காவல் நிலைய தலைமைக் காவலராக பணிபுரிபவர் வெங்கடேசன். இவர் வில்லிவாக்கம் எம்.டி.எச். சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். பாரதி நகர் சந்திப்பிடம் செல்லும்போது, வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்த ரா.சரவணன் (20), அதேப் பகுதியைச் சேர்ந்த பி.முரளி (20), மு.கார்த்திக் (21) ஆகிய 3 பேரும் மதுபோதையில் தகராறு செய்துக் கொண்டிருந்தனராம்.
இதைப் பார்த்த வெங்கடேசன், அவர்கள் 3 பேரையும் கண்டித்தார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே 3 பேரும், வெங்கடேசனை தாக்கிவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து, சரவணன், முரளி, கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments