முகப்பு
சென்னை

தேசியக் கொடியை அவமதித்தால் கடும் நடவடிக்கை: சென்னை ஆட்சியர் எச்சரிக்கை

தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 6 ஏப்ரல் 2018, 4:17 am IST
பகிர்:

தேசியக் கொடியை அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
நாட்டின் நற்பெயரை அவமதிக்கும் விதமாக பொது இடங்கள், ஏனைய இடங்களில் தேசியக் கொடி அல்லது இந்திய அரசமைப்புச் சட்டத்தை எரித்தல், சிதைத்தல், அவமதிக்கும் செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை: இத்தகைய செயல்களில் ஈடுபடுவோருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது இந்த இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
கலாசார, விளையாட்டுப் போட்டிகளின்போது காகிதத்தால் செய்யப்பட்ட கொடிகளை மட்டுமே மக்கள் பயன்படுத்த வேண்டும். நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவற்றைத் தரையில் போடக் கூடாது. தேசியக் கொடிக்கான மரியாதையை மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments