முகப்பு
தமிழ்நாடு

முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?

பள்ளிக்கு அனுமதி கிடைத்தது பற்றி முதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு

Updated On : 24 ஜூன் 2026, 1:51 pm IST
ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு - ENS
பகிர்:

தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் பள்ளிகள், வரும் கல்வியாண்டில் இயங்குவதற்கான அனுமதி கோரி விண்ணப்பித்து வரும் நேரத்தில், தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு, ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு நன்றி தெரிவித்து தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை, தனியார் பள்ளிகளுக்கு லட்சக் கணக்கில் பணம் கொடுத்துதான் அனுமதி பெறும் நிலை இருந்தது, தற்போது அந்த நிலை மாறியிருப்பதாக அவர் பதிவிட்டிருக்கிறார்.

அவருடைய பதிவில், கிராமப்புறக் குழந்தைகளுக்கு முற்றிலும் இலவசக் கல்வியை வழங்கும் எங்கள் 'கலைவாணி கல்வி மையம்' என்ற கிராமப்புறப் பள்ளிக்கு, முந்தைய அரசிடமிருந்து அனுமதிகளைப் பெறுவதில் தாமதங்கள் ஏற்பட்டன.

Advertisement

Advertisement

அந்தப் பள்ளி முற்றிலும் இலவசமாகச் செயல்படும் பள்ளியாக இருந்தபோதிலும், அதற்கான அனுமதியைப் பெற பெருமளவிலான பணம் கேட்கப்பட்டது. பணம் கொடுத்துத்தான் பள்ளிக்கு அனுமதி பெற வேண்டும், அது ஒன்றுதான் வழி என்றும் எங்களிடம் முந்தைய அரசால் கூறப்பட்டது.

ஆனால், தற்போது விஜய் தலைமையிலான தவெக ஆட்சிக்கு வந்த பிறகு, அனுமதிகள் விரைவாகவும் தானாகவும் கிடைக்கப்பெற்றுள்ளன.

எங்கள் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள இந்தச் சாதகமான மாற்றத்தைப் பாராட்டுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஊக்கமளிக்கும் மாற்றத்திற்காகத் முதல்வர் விஜய் அவர்களுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

summary

Zoho founder Sridhar Vembu thanked Chief Minister Vijay for the approval granted to the school.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments