மனைவி கொலை: கணவர் கைது
சென்னை காசிமேட்டில் இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை காசிமேட்டில் இரும்புக் கம்பியால் மனைவியை அடித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
காசிமேடு திடீர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மீனவர் கோவிந்தராஜ் (39). மனைவி லட்சுமி. ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கோவிந்தராஜ் மதுபோதையில் அடிக்கடி வீட்டில் தகராறு செய்வது வழக்கம். கடந்த 19-இல் லட்சுமியிடம் தகராறு செய்துள்ளார். தகராறு முற்றவே, இரும்புக் கம்பியால் லட்சுமியை கோவிந்தராஜ் தாக்கினார். படுகாயமடைந்த லட்சுமி, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோவிந்தராஜை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.