முகப்பு
உலகம்

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!

வெப்பத்தை தணிக்க பிரான்ஸ் மக்கள் நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

Updated On : 25 ஜூன் 2026, 9:06 am IST
பிரான்ஸில் அதிக வெப்பத்தால் ஆற்றில் குதிக்கும் இளைஞர் - ஏபி
பகிர்:

ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாள்களாக அதீத வெப்பநிலை பதிவாகி வருகிறது. வெப்பத்தை தணிக்க அந்நாட்டு மக்கள் நீர்நிலைகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

பிரான்ஸ் நாட்டில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் குவிந்த மக்களில் 40 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

பிரான்ஸ் நாட்டில் பல்வேறு இடங்களில் நேற்று (ஜூன் 24) வரலாறு காணாத அளவு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. நாள்தோறும் 100 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வெப்பம் பதிவாகும் நிலையில், நேற்று அதிகபட்ச வெப்பநிலை பதிவானது. இதனால், மக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

பிரான்ஸில் வெப்பத்தின் தாக்கத்தால் இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீர்நிலைகளில் மக்கள் குவிந்து வரும் நிலையில், கடந்த 18 ஆம் தேதி முதல் 40 பேர் நீரில் மூழ்கி இறந்துள்ளனர்.

இது தொடர்பாக பேசிய பிரான்ஸ் பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னு, கடந்த 18 ஆம் தேதி முதல் கிடைத்த தரவுகளின் அடிப்படையில் மேற்பார்வையற்ற நீர்நிலைகளில் மூழ்கி 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

அசாதாரணமாக காலகட்டத்தை அனுபவித்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இரவும் பதிவாகும் வெப்பம் வரலாற்று பதிவுகளாக மாறிவருகிறது. மாதங்களை பொருட்படுத்தாமல், பல்வேறு நகரங்கள் முன் எப்போதும் இல்லாத அளவு வெப்பத்தை பதிவு செய்கின்றன. 1947 ஆம் ஆண்டில் இருந்து பதிவாகும் அதிகபட்ச வெப்பநிலையாக தற்போது இருக்கிறது. அவசரகால எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது எனக் குறிப்பிட்டார்.

summary

Severe heatwave in Europe 40 dead in France

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments