இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை: பிரான்ஸில் பிரதமர் மோடி பேச்சு
பிரான்ஸில் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வைத் தொடக்கிவைத்து பிரதமர் மோடி பேசியது குறித்து...
இந்தியாவின் மரபணுவிலேயே (டிஎன்ஏ) புதுமைகள் பொதிந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூன் 14) தெரிவித்தார்.
பிரான்ஸில் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வை தொடக்கிவைத்துப் பேசும்போது பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஸ்லோவாக்கியாவுக்கு ஒருவார கால அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று (ஜூன் 13) புறப்பட்டுச் சென்றுள்ளார். இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டில் உள்ள நைஸ் நகரைச் சென்றடைந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் இமானுவல் மேக்ரானை இன்று (ஜூன் 14) சந்தித்துப் பேசினார்.
Advertisement
Advertisement
இந்தியா - பிரான்ஸ் புத்தாக்க ஆண்டின் ஒரு பகுதியாக இந்திய உயா்கல்வி நிலையங்கள் மற்றும் மத்திய அரசின் உதவிபெறும் உயா் தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப முயற்சிகளைக் காட்சிப்படுத்தும் பாரத் இனோவேட்ஸ் எனும் 3 நாள் நிகழ்வை அதிபர் இமானுவேல் மேக்ரானும் பிரதமர் நரேந்திர மோடியும் இன்று தொடக்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவின் மரபணுவிலேயே புதுமை பொதிந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பரந்த ஞானத்தின் மூலம் உலகிற்கு வழிகாட்டியுள்ளது. மருத்துவம் முதல் யோகா வரை மனித குலத்துக்கான பங்களிப்பில் நாட்டிற்கு முக்கியப் பங்கு உண்டு. இத்தகைய நாம் வளமான பாரம்பரியத்தின் மீது நாம் தொழில்நுட்பத்தை கட்டியெழுப்பி புதிய திசையையும் உத்வேகத்தையும் வழங்குகிறோம்.
மனித குலத்துக்கு சேவையாற்றும் தொழில்நுட்பத்திற்கு இந்தியா முன்னுரிமை அளித்து வருகிறது.