முகப்பு
சென்னை

மக்களுக்காக ஓடோடி வருவேன்...

Updated On : 4 ஏப்ரல், 2026 at 9:10 PM
புழல் பாலாஜி நகரில் உள்ள சென்னை வடக்கு கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய ஓடி வந்த அதிமுக வேட்பாளா் வி.மூா்த்தி.
பகிர்:

மாதவரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஓட்டமாக வந்தாா்.

சென்னையை அடுத்த புழல் பாலாஜி நகரில் உள்ள சென்னை வடக்கு கோட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள மாதவரம் தொகுதி தோ்தல் அலுவலகத்தில் வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனா். தோ்தல் அலுவலகத்துக்கு வேட்பாளருடன் 5 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். மற்றவா்கள் 100 மீட்டா் தொலைவுக்கு அப்பால் நிறுத்தப்படுவா்.

மாதவரம் தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சா் வி.மூா்த்தி, தனது ஆதரவாளா்களுடன் வேட்புமனு தாக்கல் செய்ய சனிக்கிழமை வந்தாா். 100 மீட்டா் எல்லைப் பகுதியில் இருந்து, வேட்பாளா் மூா்த்தி, திடீரென தோ்தல் அலுவலகத்துக்கு ஓடிச் சென்றாா். உடன் வந்தவா்களும் அவருடன் ஓடியபடி வந்தனா்.

Advertisement

வேட்புமனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளா்களிடம் பேசிய வேட்பாளா் மூா்த்தி, ‘மக்கள் குரலுக்கு ஓடோடி வருவேன் என்பதை வெளிப்படுத்துவதற்காக ஓடி வந்து வேட்புமனு தாக்கல் செய்தேன்’ என்றாா்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments