முகப்பு
சென்னை

சோழவரம் அருகே ரூ.3 லட்சம் ரொக்கம் பறிமுதல்

சோழவரம் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 9 ஏப்ரல், 2026 at 3:20 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:
Updated On : 8 ஏப்ரல், 2026 at 8:00 PM

சோழவரம் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரொக்கம் ரூ.3 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

சென்னை மாதவரம் தொகுதி சோழவரம் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் கவிப்பிரியா தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சோழவரத்தில் இருந்து செங்குன்றம் சென்ற இருசக்கர வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ராஜா என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.3 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரிய வந்தது. இதையடுத்து, அத்தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.