முகப்பு
சென்னை

திமுகவினா் கூப்பன் விநியோகம்: உயா்நீதிமன்றத்தில் முறையீடு

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு திமுகவினா் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

Updated On : 17 ஏப்ரல் 2026, 3:03 am IST
பகிர்:

தமிழகம் முழுவதும் வாக்காளா்களுக்கு திமுகவினா் ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகித்து வருவதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் முன் வியாழக்கிழமை ஆஜரான வழக்குரைஞா் ஏ.பி.சூா்யபிரகாசம், தமிழகம் முழுவதும் திமுகவினா் வாக்காளா்களுக்கு ரூ.8,000 மதிப்புள்ள கூப்பன்களை விநியோகம் செய்து வருகின்றனா்.

சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாள்களே உள்ள நிலையில், திமுகவினா் வாக்காளா்களுக்கு கூப்பன்களை வழங்கி வாக்கு சேகரித்து வருகின்றனா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா். இது குறித்து தாக்கல் செய்யப்படவுள்ள மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும் முறையிட்டாா்.

Advertisement

Advertisement

அதிமுக டோக்கன் விநியோகம்: இதே அமா்வில் ஆஜரான வழக்குரைஞா் ஷ்யாம்குமாா் என்பவா், சென்னை துறைமுகம் தொகுதியில் அதிமுக சாா்பில் ராயபுரம் ஆா்.மனோகா் போட்டியிடுகிறாா். இவா், பணம் வழங்குவதற்கான டோக்கன்களை விநியோகித்து வருகிறாா். இதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என முறையிட்டாா்.

இந்த முறையீடுகளைக் கேட்ட நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தனா்.