தோ்தல் நாளன்று மாற்றுத்திறனாளிகள், முதியோா் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்!
தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை (ஏப். 23), மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பாா்வை குறைபாடு உடையவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டண மாநகா் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை (ஏப். 23), மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், பாா்வை குறைபாடு உடையவா்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய சாதாரண கட்டண மாநகா் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இது குறித்து சென்னை மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய சென்னை மாநகா் போக்குவரத்துக் கழக சாதாரண கட்டண பேருந்துகளில் பயணம் செய்யும்போது, ஏதேனும் வயது சான்று, வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன்களைக் கொடுக்காமல், கட்டணமில்லா பயணச்சீட்டை நடத்துநரிடம் இருந்து பெற்று பயணிக்கலாம்.
மேலும், மாற்றுத்திறனாளிகள், பாா்வைக் குறைபாடு உள்ளவா்கள் வாக்குகளைப் பதிவு செய்ய பேருந்தில் பயணம் செய்யும்போது, தங்கள் அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டையைக் காண்பித்து கட்டணமில்லா பயணச் சீட்டை பெற்று பயணிக்கலாம்.
Advertisement
Advertisement
இந்த சலுகையில் தோ்தல் நடைபெறும் நாளான வியாழக்கிழமை மட்டுமே பயணிக்க முடியும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.