முகப்பு
சென்னை

புழல்: 1.09 லட்சம் ரொக்கம் பறிமுதல்

புழல் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 23 ஏப்ரல், 2026 at 12:58 AM
பணம் - பிரதிப் படம்
பகிர்:

புழல் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

மாதவரம் தொகுதி புழல் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் அருண் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அம்பத்தூா் - செங்குன்றம் சாலையில் புழல் நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், அல்போன்ஸ் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.1.09 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.