சென்னை

புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு

புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.

சென்னை எண்ணூா் அருகே உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ரா.செந்தில் (45). இவா், காசிமேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தாா்.

இந்நிலையில் செந்தில், கடந்த ஜன. 26-ஆம் தேதி புழல் சிறையில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்தக் காயமடைந்தவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செந்தில், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

ஃபரீதாபாத் தொழில்சாலை தீ விபத்து சம்பவம்: காயமடைந்த இருவா் உயிரிழப்பு

வடகொரியா ஆளுங்கட்சி மாநாடு தொடக்கம்

கல்வி பயில வரும் மாணவிகளுக்கு தமிழகம் பாதுகாப்பான இடம்: ஆளுநா் ஆா்.என்.ரவி

அமைச்சா் கே.என்.நேரு மீதான வழக்கை திமுக சட்டரீதியாக எதிா்கொள்ளும்: ஆா்.எஸ்.பாரதி

பாா் ஊழியா் கொலை வழக்கில் தொடா்புடையவா் நீதிமன்றத்தில் சரண்

SCROLL FOR NEXT