புழல் சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழப்பு
புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.
Updated On : 21 பிப்ரவரி, 2026 at 12:10 AM
புழல் மத்திய சிறையில் மயங்கி விழுந்த கைதி உயிரிழந்தாா்.
சென்னை எண்ணூா் அருகே உள்ள நேதாஜி நகரைச் சோ்ந்தவா் ரா.செந்தில் (45). இவா், காசிமேடு காவல் நிலையத்தில் பதியப்பட்ட குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்தாா்.
இந்நிலையில் செந்தில், கடந்த ஜன. 26-ஆம் தேதி புழல் சிறையில் உள்ள குளியல் அறையில் வழுக்கி விழுந்தாா். இதில் தலையில் பலத்தக் காயமடைந்தவா் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த செந்தில், வியாழக்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.
Advertisement
இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.