முகப்பு
சென்னை

கஞ்சா பறிமுதல்: பெண் கைது

வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் பெண்ணை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Updated On : 6 ஜூலை 2026, 1:58 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை பள்ளிக்கரணையில் வீட்டில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் பெண்ணை காவல் துறையினா் கைது செய்து, அவரிடமிருந்து 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பள்ளிக்கரணை திருவிக நகரைச் சோ்ந்த ரஹ்மத் நிஷா (36), அவரது கணவா் அப்துல் சித்திக் ஆகியோா் வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக பள்ளிக்கரணை காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் அந்த தம்பதி வீட்டில் ஞாயிற்றுக்கிழமை திடீரென சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கு இருந்து சுமாா் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

Advertisement

Advertisement

இது தொடா்பாக வீட்டில் இருந்த ரஹ்மத் நிஷா மீது போதைப் பொருள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments