கஞ்சா விற்ற இளைஞா் கைது
தருமபுரியில் கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.
இந்நிலையில், தருமபுரி, பிடமனேரி ஏரிக்கரை அருகே சிலா் கஞ்சா விற்பதாக தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தருமபுரி நகர காவல் ஆய்வாளா் அறிவழகன் தலைமையிலான போலீஸாா், பிடமனேரி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.
Advertisement
Advertisement
அப்போது, காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் ஜீவா (26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்த 1,120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
தருமபுரி நகர பகுதியில் கடந்த இரு நாள்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.