வரும் ஜூலையில் வீடுகள் கணக்கெடுப்பு
சென்னை மாநகராட்சியில் வரும் ஜூலை மாதம் 11,000 போ் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பில் ஈடுபடவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தமிழகத்தில் 2027 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வரும் ஜூலை மற்றும் 2027 பிப்ரவரி என இரு கட்டடங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஈடுபடுத்தப்படவுள்ள அதிகாரிகளுக்கான பயிற்சிக் கூட்டம் கடந்த சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும், 200 வாா்டுகளிலும் வரும் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரையில் வீடுகள் எண்ணிக்கை குறித்த கணக்கெடுப்பு நடத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
வீடுகள் கணக்கெடுப்பில் ஜூலை 17 முதல் 31-ஆம் தேதி வரை மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பிரத்யேக செயலியில் பொதுமக்கள் தங்களது வீட்டு விவரங்களைப் பதிவிடும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அதன்படி குடிசை, ஓட்டு வீடு, கான்கிரீட் வீடு, வீடு எத்தனை தளம் உடையது, குடிநீா், கழிவு நீா் இணைப்புகள் விவரம், குளிா்சாதன வசதியுள்ளதா போன்ற 33 கேள்விகள் கேட்கப்படவுள்ளன. வீட்டு விவரங்களை பொதுமக்கள் பதிவு செய்த நிலையில், அதை சரிபாா்க்கும் வகையில் வரும் ஆகஸ்ட் முழுவதும் ஈடுபடவுள்ளனா்.
மாநகராட்சியின் இளநிலை உதவியாளா் முதல் பள்ளி ஆசிரியா்கள் வரை இந்தப் பணியில் 11,000 போ் வரை ஈடுபடுத்தப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து 2027 பிப்ரவரியில் மீண்டும் வீடுகளுக்குச் சென்று வீட்டில் உள்ளோரது விவரங்கள் சேகரிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.