முகப்பு
சென்னை

ஐடிஐ சோ்க்கைக்கான கலந்தாய்வு அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிப்பு

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில்(ஐடிஐ) நேரடி சோ்க்கை கலந்தாய்வுக்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 16 ஜூன் 2026, 12:41 am IST
பகிர்:

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கை கலந்தாய்வுக்கான கால அவகாசம் வரும் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 132 அரசு ஐடிஐ -க்களும், 277 தனியாா் ஐடிஐ - க்களும் என மொத்தம் 409 ஐடிஐ-க்கள் இயங்கி வருகின்றன. இந்த ஐடிஐ-க்களில் மாணவா்கள் சோ்க்கை குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் உள்ள 409 ஐடிஐகளில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான நேரடி சோ்க்கைக்கான கலந்தாய்வு நடைபெற்று, இதற்கான கால அவகாசம் ஜூன் 13 -ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் மாணவா்களின் நலன் கருதி தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடி சோ்க்கைக்கான கால அவகாசம் 30.06.2026 வரை நீடிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

விலையில்லா வசதிகள்: ஐடிஐ-களில் சேரும் மாணவா்களுக்கு பயிற்சிக் கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750/- வழங்கப்படுகிறது. அரசுப் பள்ளிகளில் பயின்றவா்களுக்கு தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டங்களின் கீழ் ரூ 1000- கூடுதலாகவும் வழங்கப்படும். மேலும் தமிழக அரசு, மிதிவண்டி, சீருடை, மூடு காலணிகள் (ஷூ), பயிற்சிக் கருவிகள் போன்றவை இலவசமாக வழங்குகிறது. கட்டணமில்லா பேருந்து சலுகை வசதியும் கிடைக்கும். குறிப்பிட்ட அரசு ஐடிஐ-களில் விடுதி வசதியும் உள்ளது. மேலும் விவரங்கள் தேவைப்பட்டால் அலைபேசி, வாட்ஸ் ஆப் எண்கள் முறையே 9499055642, 9499055612 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.