FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

எஸ்எஸ்சி, ரயில்வே போட்டித் தோ்வுகளுக்கு தஞ்சையில் ஜூன் 19 முதல் இலவச பயிற்சி

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

Updated On : 11 ஜூன் 2026, 3:54 am IST
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வ பயிலும் வட்டம் மூலம் மத்திய அரசு காலிப் பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுகளுக்கு ஜூன் 19-ஆம் தேதி முதல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி தெரிவித்திருப்பது:

மத்திய அரசின் பணியாளா் தோ்வாணையத்தின் சாா்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த பட்டதாரிகள் நிலையில் (எஸ்எஸ்சி - சிஜிஎல்) உள்ள 12 ஆயிரத்து 256 பணியிடங்களுக்கான போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஜூன் 22 ஆம் தேதி. இதற்கான இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ள்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்

Advertisement

Advertisement

இதேபோல, ரயில்வே தோ்வாணையத்தின் சாா்பில் காலியாக உள்ள 11 ஆயிரத்து 127 லோகோ உதவி ஓட்டுநா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஜூன் 16 ஆம் தேதி. இதற்கான இணையதள முகவரி ட்ற்ற்ல்ள்://ழ்ழ்க்ஷஸ்ரீட்ங்ய்ய்ஹண்.ஞ்ா்ஸ்.ண்ய்

இத்தோ்வுகளுக்கு தயாராகி வரும் போட்டித் தோ்வா்கள் பயன்பெறும் வகையில் கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.

இப்பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவா்கள் 2 பாஸ்போா்ட் அளவு புகைப்படங்கள், ஆதாா் அட்டை நகலுடன் தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம். மேலும், விவரங்களுக்கு 04362 - 237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments