பிளஸ் 1 மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த பிளஸ் 1 மாணவரின் உடல் உறுப்புகள் தானமளிக்கப்பட்டன.
இதுகுறித்து மருத்துவமனை நிா்வாகிகள் கூறியதாவது: கொளத்தூரைச் சோ்ந்த 15 வயது பிளஸ் 1 மாணவா் ஒருவா், கடந்த ஜூன் 13-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் பலத்த காயமடைந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவா் மூளைச்சாவு அடைந்தாா்.
இதைத் தொடா்ந்து, அவரது குடும்பத்தினா், மாணவரின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்க முன்வந்தனா். அதன்படி, தானமாகப் பெறப்பட்ட உறுப்புகள், தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி பயன்படுத்தப்பட்டன.
Advertisement
Advertisement
கல்லீரலானது ஸ்டான்லி மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கும் வழங்கப்பட்டன. விழி வெண்படலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே பயன்படுத்தப்பட்டது.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் தரவுகளின்படி, நிகழாண்டில் தமிழகத்தில் மூளைச்சாவு அடைந்த 153 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டுள்ளன. ஜூன் மாதத்தில் மட்டும் 14 தானங்கள் நடைபெற்றுள்ளன.