FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திருநெல்வேலி

மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்

திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

Updated On : 14 ஜூன் 2026, 2:16 am IST
பகிர்:

திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.

ராமையன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சசுமாலா (35). அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவருக்கு தலைவலி அதிகமாக இருந்ததாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், சசுமாலா மூளைச்சாவு அடைந்தாராம். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள், தோல் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டது. பின்னா் சசுமாலாவின் உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments