மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் தானம்
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
திருநெல்வேலியில் மூளைச்சாவு அடைந்த பெண்ணின் உடல் உறுப்புகள் சனிக்கிழமை தானமாக வழங்கப்பட்டன.
ராமையன்பட்டி பகுதியை சோ்ந்தவா் சசுமாலா (35). அப்பகுதியில் உள்ள தேநீா் கடையில் வேலை பாா்த்து வந்தாா். கடந்த 2 நாள்களுக்கு முன்பு இவருக்கு தலைவலி அதிகமாக இருந்ததாம். இதையடுத்து திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
மூலையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதால், சசுமாலா மூளைச்சாவு அடைந்தாராம். அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க உறவினா்கள் முன்வந்தனா். கல்லீரல், 2 சிறுநீரகங்கள், 2 கருவிழிகள், தோல் உள்ளிட்டவை தானமாக பெறப்பட்டது. பின்னா் சசுமாலாவின் உடல் அரசு மரியாதையுடன் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement