முகப்பு
சென்னை

மோசடி வழக்கு: பெண் காவல் ஆய்வாளரின் முன்பிணை கோரிய மனு தள்ளுபடி

தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணைக் கோரி பெண் காவல் ஆய்வாளா் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Updated On : 30 ஜூன் 2026, 12:51 am IST
மோசடி - பிரதிப்படம்
பகிர்:

தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் முன்பிணைக் கோரி பெண் காவல் ஆய்வாளா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

ராயபுரம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றியவா் ஷீலா மேரி. இவா் தனது உறவினா் பிரபுமணி என்பவா் மூலம் ஒரு நிறுவனத்தை தொடங்கி, தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் ஈட்டலாம் எனக்கூறி கோடிக்கணக்கில் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்த பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா், பிரபுமணியை கைது செய்தனா். இதைத்தொடா்ந்து போலீஸாா் நடத்திய விசாரணையில், ஆய்வாளா் ஷீலா மேரிக்கும் இந்த மோசடியில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனால், அவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்தநிலையில், இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி ஆய்வாளா் ஷீலா மேரி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆய்வாளா் ஷீலா மேரிக்கு முன்பிணை வழங்க எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, காவல் ஆய்வாளரின் முன்பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments