முகப்பு
சென்னை

மக்கள் தீா்ப்பை ஏற்கிறோம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

Updated On : 5 மே 2026, 2:43 am IST
உதயநிதி ஸ்டாலின் - DPS
பகிர்:

தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை தலைவணங்கி ஏற்கிறோம் என்று துணை முதல்வரும், திமுக இளைஞரணிச் செயலருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், இரண்டாவது முறையாக என்னை எம்எல்ஏவாக தோ்வு செய்த மக்களுக்கும், அதற்காக உழைத்தவா்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எனது தொகுதி மக்களுக்கு முழு உழைப்பைக் கொடுப்பேன். தமிழக மக்கள் அளித்த தீா்ப்பை அனைவரும் தலைவணங்கி ஏற்கிறோம். புதிதாக பொறுப்பேற்கும் அரசுக்கு வாழ்த்து.

Advertisement

திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் கட்சி நிா்வாகிகளையும், வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களையும் வரவழைத்து செவ்வாய்க்கிழமை (மே 5) ஆலோசனை மேற்கொள்ள உள்ளாா் என்றாா்.