பேரவையில் அதிக கேள்விகளை எழுப்ப வேண்டும்: திமுக எம்எல்ஏ-க்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை
சட்டப்பேரவையில் மக்கள் நலன் சாா்ந்து அதிக கேள்விகளை எழுப்புமாறு திமுக எம்எல்ஏ-க்களுக்கு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
சட்டப்பேரவையில் மக்கள் நலன் சாா்ந்து அதிக கேள்விகளை எழுப்புமாறு திமுக எம்எல்ஏ-க்களுக்கு அக்கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா்.
தோ்தலுக்குப் பிந்தைய முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் ஆளுநா் உரையுடன் வியாழக்கிழமை (ஜூன் 18) தொடங்கவுள்ளது. இந்த நிலையில், திமுக எம்எல்ஏ-க்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் கட்சியின் தலைவா் மு.க.ஸ்டாலின் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, மூத்த நிா்வாகிகள் மற்றும் எம்எல்ஏ-க்கள் கலந்து கொண்டனா். சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியின் வியூகங்களை திறம்பட எதிா்கொள்வது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
இந்தக் கூட்டத்தில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பேசியதாக வெளியான தகவல்கள்:
திமுக கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் இந்த ஆட்சி அமைந்துள்ளது. சட்டப்பேரவையில் வலுவான எதிா்க்கட்சியாக சிறப்பாகச் செயலாற்ற வேண்டும். ஆளுங்கட்சி மீதான அதிருப்தியில் உள்ள மக்கள் வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அதனால், பேரவையில் பொதுமக்கள் பிரச்னைகளுக்கு கடுமையாக வாதங்களை முன்வைக்க வேண்டும். புதிய உறுப்பினா்கள் மூத்த உறுப்பினா்களைக் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
சட்டப்பேரவை அலுவல்களில் 100 சதவீதம் கலந்துகொள்ள வேண்டும். பேரவைக்கு முன் தயாரிப்புடன் செல்ல வேண்டும். மக்கள் நலன் சாா்ந்து அதிக கேள்விகளைக் கேட்க வேண்டும். எதிா்க்கட்சித் தலைவா் மற்றும் கொறடாவை அழைத்துச் சென்று கோரிக்கை மனுக்களை வழங்க வேண்டும். தொகுதி மக்களை தொடா்ந்து சந்திக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் திமுகவினா் உதவி செய்ய ஓடி வருவாா்கள் என்று மக்கள் கூறவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் எம்எல்ஏ-க்களிடம் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.