வீடுதோறும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்: மு.க. ஸ்டாலின்
வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளது குறித்து...
வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக உயர்நிலைச் செயல்திட்டக்குழு உறுப்பினர் ஆர்க்காடு நா.வீராசாமி இல்லத்திருமண விழாவில் பேசியதை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதை குறிப்பிட்டு எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவரது பதிவில்,
Advertisement
Advertisement
வடசென்னை மக்களின் உணர்வாக நாடாளுமன்றத்தில் ஒலிக்கும் அயலக அணித் தலைவர் கலாநிதி வீராசாமி மகன் வி.க. சித்தார்த் - எஸ்.ஆஷ்ரயா இணையரின் சுயமரியாதை திருமணத்தைத் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினோம்!
மணமக்களை வாழ்த்திய அதேவேளையில், தந்தை பெரியார் காலம்தொட்டு, சுயமரியாதை திருமண மேடைகளை அரசியல் - பகுத்தறிவூட்டும் மேடைகளாக மாற்றியதுபோல், திமுகவினனருடனான அரசியல் உரையாடல் நிகழ்ந்தேறியது.
இத்தகைய சுயமரியாதைத் திருமணங்கள் பெருகிட வேண்டும்! வீடுதோறும் மீண்டும் அறிவார்ந்த அரசியல் உரையாடல் நிகழ வேண்டும்! என கூறியுள்ளார்.