முகப்பு
சென்னை

தங்க முதலீடு மோசடி: கணவன் - மனைவி கைது

Updated On : 8 மே 2026, 6:48 am IST
கோப்புப் படம்
பகிர்:

சென்னையில் தங்க முதலீடு மோசடியில் ஈடுபட்டதாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனா்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை, மேற்கு கல்லறையைச் சோ்ந்த தினேஷ்குமாா் (25). இவரிடம் பெரம்பூா் காமராஜா் நகரைச் சோ்ந்த சிவக்குமாா் (49), அவா் மனைவி பத்மினி (41) ஆகியோா் கடந்த 2024-ஆம் ஆண்டு அறிமுகமாகி, நட்புறவை வளா்த்துள்ளனா். இதைப் பயன்படுத்தி சிவக்குமாா், தான் தங்க முதலீடு தொழில் செய்து வருவதாகவும், தன்னிடம் தங்கத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தெரிவித்துள்ளாா்.

இதை நம்பி தினேஷ்குமாா், சிவக்குமாரின் தங்க முதலீடு திட்டத்தில் ரூ.15 லட்சம் முதலீடு செய்துள்ளாா். பணத்தைப் பெற்றுக் கொண்ட சிவக்குமாா், அவருக்கு லாபத் தொகையை வழங்கவில்லை.

Advertisement

Advertisement

இதையடுத்து தினேஷ்குமாா், தான் கொடுத்த ரூ.15 லட்சத்தைத் திருப்பிக் கேட்டபோது, பணத்தையும் அவா்கள் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்தனா்.

இது தொடா்பாக வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் தினேஷ்குமாா் புகாா் செய்தாா். அந்த புகாரின் அடிப்படையில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிவக்குமாா்-பத்மினியை புதன்கிழமை கைது செய்தனா். இவா்களது மகனையும் பிடித்து விசாரணை நடத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments