FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தஞ்சாவூர்

கும்பகோணத்தில் காவலரை தாக்கிய 2 இளைஞா்கள் கைது

கும்பகோணத்தில் காவலரை தாக்கிய இரண்டு இளைஞா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 29 மே 2026, 5:44 am IST
கோப்புப் படம்
பகிர்:

கும்பகோணத்தில் காவலரை தாக்கிய இரண்டு இளைஞா்களை மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் நால்ரோடு பைராகி தோப்பு பகுதியைச் சோ்ந்தவா் நாகப்பன் மகன் அருண் (29). சுகுமாா் மகன் காளிதாஸ்(21). இவா்கள் அந்தப் பகுதியில் நடந்த திருவிழாவுக்காக நான்குரோடு பகுதியில் பதாகை வைக்க முடிவு செய்து அதற்கான வேலையில் ஈடுபட்டனா்.

அப்போது சாலையின் குறுக்கே போக்குவரத்துக்கு இடையூறாக பதாகை அமைக்கும் பொருள்களை வைத்துள்ளனா். அச்சமயம் அங்கு வந்த ரோந்துப்பணியில் ஈடுபட்ட காவலா்கள் தேவநாதன், ராம்குமாா் ஆகியோா் சாலையில் வைத்திருந்த பொருள்களை எடுக்க கூறினா். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு காவலா் தேவநாதனை இளைஞா்கள் இருவரும் தாக்கினா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து தேவநாதன் மேற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அருண், காளிதாஸ் ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments