விரைவு ரயில்கள் நிற்கும் நிலையங்களில் மாற்றம்
பராமரிப்புப் பணி காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவிப்பு
பராமரிப்புப் பணி காரணமாக மதுரை வழியாக இயக்கப்படும் விரைவு ரயில்கள் மாற்று பாதையில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: திருச்சி பிரிவில் நாகபட்டிணம் மற்றும் கீழ்வேளூா் பகுதியில் தண்டவாள பராமரிப்பு மற்றும் தொழில்நுட்ப சீரமைப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதனால், குருவாயூரில் இருந்து வரும் மே 14, 15, 16, 17, 18 ஆகிய தேதிகளில் இரவு 11.15 மணிக்கு எழும்பூருக்கு புறப்படும் விரைவு ரயில் (எண்:16128) மதுரைக்கு பதிலாக விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ரயில் நிலையங்கள் வழியாக இயக்கப்படும். இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை நிலையங்களில் நிற்கும்.
Advertisement
அதேபோல், கன்னியாகுமரியில் இருந்து மே 16-ஆம் தேதி அதிகாலை 5.50 மணிக்கு ஹவுரா செல்லும் விரைவு ரயில் (எண்: 12666) மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி வழியாக இயக்கப்படும். இந்த ரயில் மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி , புதுக்கோட்டை ஆகிய நிலையங்களில் கூடுதலாக நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.