முகப்பு
தமிழ்நாடு

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் 6 நாளிகள் தாமதமாக இயக்கப்படும்

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் 6 நாள்கள் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Updated On : 10 ஜூன் 2026, 3:21 am IST
ரயில் - கோப்புப்படம்
பகிர்:

குருவாயூா்-சென்னை விரைவு ரயில் வரும் புதன்கிழமை (ஜூன் 10) முதல் 6 நாள்கள் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தெற்கு ரயில்வே மண்டலத்தில் திருச்சி கோட்டத்தில் பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக புதன்கிழமை (ஜூன் 10) முதல் 14-ஆம் தேதி வரை மற்றும் 15, 16 ஆகிய தேதிகளில் குருவாயூரில் இரவு 11.15 மணிக்குப் புறப்படும் விரைவு ரயில் (எண்: 16128) வழியில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்பட்டு சென்னை எழும்பூா் நிலையத்தைச் சென்றடையும். அத்துடன் ஜூன் 17-ஆம் தேதி குருவாயூா் விரைவு ரயில் 15 நிமிஷ்ங்கள் வழியில் தாமதமாக இயக்கப்படும்.

Advertisement

Advertisement

மறுமாா்க்கத்தில் வரும் 13, 17, 20 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில் காலை 10.40 மணிக்குப் புறப்படும் குருவாயூா் விரைவு ரயில் வழியில் 20 நிமிஷங்கள் தாமதமாக இயக்கப்படும். வரும் 12-ஆம் தேதி திருச்சியில் இருந்து பிற்பகல் 1.35 மணிக்குப் பதிலாக பிற்பகல் 2.20 மணிக்கு என 45 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும் ஹௌரா அதிவிரைவு ரயில் (எண்: 12664) சென்னை வழியாக செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.