காலமானார் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி
சென்னை: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் இ. சுந்தரமூர்த்தி (84) சென்னையில் புதன்கிழமை (மே 13) காலமானார்.
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி "பரிமேலழகர் திருக்குறள் உரைத்திறன்' என்ற பொருளில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழி, இலக்கியத் துறைகளின் தலைவராகவும், பதிப்புத் துறை இயக்குநராகவும் பணியாற்றினார். கடந்த 2001 முதல் 2004 }ஆம் ஆண்டு வரை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும், 2008 முதல் 2014 வரை செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து 2021}இல் இந்த நிறுவனத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.
விருதுகள்: திருக்குறள் அணிநலம், கல்கத்தா தேசிய நூலகத் தமிழ்ச் சுவடிகள், தமிழாய்வுத் தொகுதி}10 உள்ளிட்ட நூல்களைச் சென்னைப் பல்கலைக்கழக வெளியீடாக பேராசிரியர் இ.சுந்தரமூர்த்தி வெளியிட்டுள்ளார்.
Advertisement
சொல்வலை வேட்டுவர், வள்ளுவர், நடையியல், பாரதி நடையியல், திருக்குறள் பரிமேலழகர் உரை நுண்பொருள் மாலை, இலக்கியச் சுடர், திருக்குறள் சில அரிய பதிப்புகள் என 50}க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். மேலும், சுவடியியல், நடையியல், அகராதியியல், மொழிபெயர்ப்பியல், ஆய்வியல் என அனைத்துத் துறைகளிலும் பங்களிப்பை அளித்துள்ளார். அவருக்கு தமிழக அரசு சார்பில் "திருவள்ளுவர் விருது', "செம்மொழி கலைஞர் விருது' உள்பட 20}க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
பேராசிரியர் இ.சுந்தரமூர்த்திக்கு மனைவி இ.வசந்தி, ஒரு மகள், இரு மகன்கள் உள்ளனர். சென்னை பெருங்குடி திருமலை நகர் விரிவு பாரதி தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சுந்தரமூர்த்தியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது இறுதிச் சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மின்மயானத்தில் வியாழக்கிழமை (மே 14) நடைபெறவுள்ளது. தொடர்புக்கு: 94440}24120.