முகப்பு
சென்னை

உலக கால்நடை மருத்துவ தினம்: செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி முகாம்

Updated On : 14 மே 2026, 7:18 am IST
வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்ற செல்லப் பிராணிகளுக்கான இலவச தடுப்பூசி முகாம்.
பகிர்:

சென்னை வேப்பேரி கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: உலக கால்நடை மருத்துவ தினத்தையொட்டி புதன்கிழமை செல்லப் பிராணிகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில், 75 நாய்கள் மற்றும் 22 பூனைகளுக்கு இலவச வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த முகாமை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. துணை வேந்தரும் (பொ) பதிவாளருமான இர.நரேந்திர பாபு தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் பேசுகையில், செல்லப் பிராணிகளுக்கு உரிய நேரத்தில் தடுப்பூசிகள், குடற்புழு நீக்க மருந்துகளைக் கொடுத்து அவற்றின் உடல் நலத்தைப் பேணிக்காக்க வேண்டும். அவற்றுக்கு உடல்நிலை பாதிக்கும்போது, தெருவிலே விட்டுவிடக்கூடாது. கால்நடை மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம் என்றாா்.

Advertisement

Advertisement

இந்த முகாமில், கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வா் ப.தேவேந்திரன், தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை. சிகிச்சையியல் இயக்குநா் ரி.அனில்குமாா், பேராசிரியா்கள் கோ.விஜயகுமாா், நா.ஜெயதிலகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments