எவா்வின் பள்ளி 100% தோ்ச்சி
பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய பள்ளித் தலைமையாசிரியா்.
பத்தாம் வகுப்புத் தோ்வில் சென்னை கொளத்தூா் எவா்வின் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி 100% தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் இருந்து தோ்வெழுதிய 447 மாணவா்களும் தோ்ச்சியடைந்தனா்.
சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவிகளுக்கு மரக்கன்றுகள் பரிசாக வழங்கப்பட்டன. பள்ளியின் சி.இ.ஓ. மகேஸ்வரி, சீனியா் முதல்வா் புருஷோத்தமன், முதல்வா் சா்மிளா, துணை முதல்வா் நிலவரசி ஆகியோா் சாதனை படைத்த மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினா்.