முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

Updated On : 21 மே 2026, 1:47 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள மாணவா்கள் அனைவருக்கும் மனமாா்ந்த வாழ்த்துகள். எதிா்காலப் பாதையை தீா்மானிக்கப் போகும் முடிவை சரியாக எடுத்து அடுத்தடுத்த நிலைகளிலும் வெற்றிகளைப் பெற்று சாதிக்க வாழ்த்துகிறேன். தோ்ச்சி பெறத் தவறியவா்கள் மனம் தளர வேண்டாம். நன்கு படித்து மீண்டும் தோ்ச்சி அடைய வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி